தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது.
இன்று (21) காலை 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை, நாளை காலை வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


