உள்ளூர் செய்திகள்

கிழக்குக்கு இனிப்பான செய்தி: ‘மீனகயா’ இரவு நேர புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்!

ரற்ற காலநிலை மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு இடையிலான “மீனகயா” (Meenagaya Night Mail) இரவு நேர புகையிரத சேவை, எதிர்வரும் பிப்ரவரி 23-ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, பயணிகளின் வசதிக்காக பின்வரும் கால அட்டவணையின் கீழ் சேவைகள் இடம்பெறவுள்ளன:

புதிய நேர அட்டவணை:

1. கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு (23.02.2026 முதல்):

  • புறப்படும் நேரம்: இரவு 07.00 மணி (கொழும்பு கோட்டை)
  • வந்தடையும் நேரம்: அதிகாலை 04.50 மணி (மட்டக்களப்பு)

2. மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு (24.02.2026 முதல்):

  • புறப்படும் நேரம்: இரவு 08.00 மணி (மட்டக்களப்பு)
  • வந்தடையும் நேரம்: அதிகாலை 05.30 மணி (கொழும்பு கோட்டை)

மட்டக்களப்பு மார்க்கமான புகையிரத பாதைகள் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இணங்க இந்த இரவு நேர சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

கீழே கிளிக் செய்து இப்போது இணைந்திடுங்கள்

https://whatsapp.com/channel/0029Vb7ihfj9RZAgYc6Pea1K

This will close in 20 seconds