உள்ளூர் வணிகம்

ரஷ்யா, பிரிட்டன் பயணிகளை முறியடித்து இலங்கையில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!

இலங்கையில் 1 மில்லியனைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை; ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களில் 54,465 பேர் வருகை: முதலிடத்தில் இந்தியா!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு 2026ஆம் ஆண்டில் பாரிய வளர்ச்சி கண்டு வரும் நிலையில், ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களுக்குள் மாத்திரம் 54,465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

வெளியிடப்பட்டுள்ள புதிய புள்ளிவிபரத் தரவுகளின்படி, இக்காலப்பகுதியில் அண்டை நாடான இந்தியாவில் இருந்து மட்டும் மிக அதிகளவாக 21,839 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது இக்குறிப்பிட்ட 14 நாட்களில் இலங்கைக்கு வந்த மொத்த வருகையாளர்கள் எண்ணிக்கையில் 42% என்ற பாரிய பங்கீடாகும்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்தியாவைத் தவிர, ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சீனாவிலிருந்து 3,503 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) 4,160 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,105 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூன் 14 வரையிலான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாகக் கணக்கிடுகையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,076,487 (1.07 மில்லியன்) எனப் பிரம்மாண்டமாகப் பதிவாகியுள்ளது.

இவர்களில், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து மட்டும் 272,099 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 102,253 பேரும், ரஷ்யாவிலிருந்து 76,686 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இத்தரவுகள் இலங்கையின் பொருளாதார மீட்சிக்குச் சுற்றுலாத்துறை வழங்கி வரும் பலமான பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link