ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அவர் தாக்குதலில் “பாதிக்கப்பட்டுள்ளார்” (Damaged) என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாக்ஸ் நியூஸ் (Fox News) வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி மற்றும் தற்போதைய நிலை:
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய “Epic Fury” வான்வழித் தாக்குதலில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், அவர் பதவிக்கு வந்த பிறகு இன்றுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. அவரது உரைகள் மற்றும் கருத்துக்கள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களாலேயே வாசிக்கப்பட்டு வருகின்றன.
டிரம்பின் கருத்து:
புதிய தலைவர் மொஜ்தபா கமேனியின் நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது, “அவர் உயிருடன் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் அவர் காயமடைந்துள்ளார் அல்லது ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் (Damaged)” என டிரம்ப் தெரிவித்துள்ளார். புதிய தலைவர் எங்களிடம் (அமெரிக்கா) அங்கீகாரம் பெற வேண்டும் என டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


