தமது 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) மற்றும் அவரது தூதுக்குழுவினர், இன்று (04) கொழும்பு தேசிய மருத்துவமனையில் தமது கள ஆய்வை மேற்கொள்கின்றனர்.
7 பேர் கொண்ட தூதுக்குழுவினராக நேற்று (03) நாட்டிற்கு வருகைதந்த ரஷ்ய சுகாதார அமைச்சர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய துறைகள்
இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் ரஷ்ய சுகாதார அமைச்சுக்களுக்கு இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MOUs) கைச்சாத்திடப்படவுள்ளன. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆழமாக ஆராயப்படவுள்ளது:
புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)
🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
- மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
- மருத்துவ நிபுணர்களுக்கான பயிற்சிகள் மற்றும் கல்வி சார் ஒத்துழைப்பு.
- ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துதல்.
- சுகாதாரத் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மருத்துவ சுற்றுலா.
“ரஷ்ய தூதுக்குழுவினர் தங்களது 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாளை (05) நாட்டைவிட்டுப் புறப்படவுள்ளனர்.”


