முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனத்திற்குப் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பாரிய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த விசேட அறிவித்தலுக்கு அமைவாக, இன்று காலை அவர் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய பிரியங்கர ஜயரத்னவையும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து இவர்களிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
- 🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
- 👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
- 📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)



