புத்தளம் மார்க்கத்தில் அமைந்துள்ள தில்லையடி பிரதேசம் பலத்த மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ளநீர் காணப்படுவதால், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புத்தளம் வரை செல்லும் ரயில்கள் சிலாபம் ரயில் நிலையம் வரை மாத்திரமே இயக்கப்படவுள்ளன.
இந்தத் தீர்மானம் இன்று (13) மற்றும் நாளை (14) ஆகிய இரு தினங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்து தண்டவாளங்களில் இருந்து வெள்ளநீர் வடிந்த பின்னரே வழமையான ரயில் சேவைகள் புத்தளம் வரை ஆரம்பிக்கப்படும்.
வெள்ள அபாயம் காரணமாகப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)
🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்




