2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாமை ஒரு தடையாக இருக்காது என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த ஜூலை 3ஆம் திகதி முதல் ஆரம்பமான ஆன்லைன் மூலமான (Online) விண்ணப்பப் படிவங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் ஜூலை 23ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. எனவே, உத்தியோகபூர்வ பரீட்சை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் அல்லது தகவல்களுக்கு, பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது 011-2784537, 011-2786616, 011-2784208 ஆகிய இலக்கங்கள் மற்றும் தொலைநகல் (Fax) 011-2784422 ஊடாக தொடர்புகொள்ள முடியும்.



