ஜூன் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு (LPG) விலை திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளை மறுதினம் (ஜூன் 04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஜூன் 5 ஆம் திகதி முதல் புதிய எரிவாயு விலை திருத்தத்தை நாட்டில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான இறுதி அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
உலக சந்தையில் தற்போது நிலவும் எல்பிஜி எரிவாயுவின் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை உள்நாட்டில் எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த மே மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க அந்த நிறுவனம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




