உள்ளூர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய காணொளி ஊடாக சாட்சியமளிக்க நீதிமன்றம் இணக்கம்.

கோட்டாபய

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகநாந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொளி வாயிலாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், அவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவின் (Habeas Corpus) அடிப்படையில் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றம் முன்னதாகவே அழைப்பாணை அனுப்பியிருந்தது. அவரும் தான் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் முன்னதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

எனினும், தற்போது நிலவும் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி தம்மால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாது என கோட்டாபய ராஜபக்ஷ தரப்பால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, தற்போது காணொளி வாயிலாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link