அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, இவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவினால் இவ்வாறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் (ETU) அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.




