உள்ளூர்

1 1தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு கோட்டை நீதிமன்றம் அழைப்பாணை!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த 11 தமிழ் இளைஞர்களைக் கப்பம் கோரி கடத்திச் சென்று, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, பின்னர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான மிக முக்கிய வழக்கில் பாரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இவ்வழக்கில் ஒரு முக்கிய சந்தேகநபராக (Suspect) உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இதனடிப்படையில், எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்றம் இன்று (10) அழைப்பாணை (Summons) பிறப்பித்துள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

பின்னணி மற்றும் குற்றச்சாட்டு விபரங்கள்:

  • கடந்த 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கல்வி பயிலும் மற்றும் தொழில் புரியும் 11 தமிழ் இளைஞர்கள் பணம் மற்றும் கப்பம் கோரும் நோக்கில் திட்டமிட்டு கடத்தப்பட்டனர்.
  • கடத்தப்பட்ட இந்த தமிழ் இளைஞர்கள் கொழும்பு மற்றும் திருகோணமலை கடற்படை முகாம்களுக்குள் அமைந்துள்ள இரகசிய நிலத்தடி அறைகளில் (Gunside Underground Cells) சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டு கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
  • கடற்படை உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவினர் சம்பந்தப்பட்ட இக்கோரச் சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த பல வருடங்களாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

கடத்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கோ அல்லது இக்கடத்தல்களை மேற்கொண்ட பிரதான கடத்தல்காரரான கடற்படை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்டவர்களுக்குப் புகலிடம் அளித்து, அவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கச் செய்ததற்கோ முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சிஐடி மேற்கொண்ட அண்மைக்கால விசாரணைகளில் ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link