உள்ளூர்

நெடுந்தீவு மக்களின் நீண்டநாள் குறை தீர்ந்தது: ‘வடதாரகை’ படகு இன்று முதல் மீண்டும்

நெடுந்தீவு மக்களுக்கான கடல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது: திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ‘வடதாரகை’ படகு இன்று முதல் மீண்டும் சேவைக்குக் கொண்டு வரப்பட்டது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கான பயணிகள் கடல் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த ‘வடதாரகை’ படகு, தனது முழுமையான திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில், இன்று திங்கட்கிழமை (15) முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

முன்னதாக, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவுக்கு இடையில் தொடர்ச்சியாகச் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் பாரம்பரியமிக்க குமுதினி ஆகிய மூன்று படகுகளும் அடுத்தடுத்து ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் காரணமாகப் பழுதடைந்திருந்தன. இதனால் நெடுந்தீவுக்கான தினசரிப் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர்கள் தங்களது போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்தனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

நெடுந்தீவு மக்களின் இந்த அத்தியாவசியப் போக்குவரத்துப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, பழுதடைந்த படகுகளைத் துரிதமாகத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன.

இதற்கமைய, முதற்கட்டமாக வடதாரகை படகின் திருத்தப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, இன்று முதல் அது பயணிகள் சேவையைத் தொடங்கியுள்ளது. இதனால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்குத் தற்காலிகமாகப் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

அதேவேளை, ‘நெடுந்தாரகை’ படகானது தற்போது காங்கேசன்துறை (KKS) கடற்படைத் துறைமுகத்தில் வைத்து தீவிரமாகத் திருத்தப்பட்டு வருகிறது. அதன் பணிகள் நிறைவடைந்தவுடன், அந்தப் படகும் மிக விரைவில் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இயந்திரக் கோளாறு காரணமாகச் சேவையிலிருந்து நீண்டநாட்களாக விலக்கப்பட்டிருந்த ‘குமுதினி’ படகின் எஞ்சின் பழுதுபார்க்கும் பணிகளும் தற்போது தொழில்நுட்ப வல்லுநர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துப் பணிகளும் முடிந்த பின்னர், குமுதினி படகும் வழமை போல மக்களின் பயன்பாட்டுக்காகக் கடல் சேவையில் இணைக்கப்படும் எனத் துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link