உள்ளூர்

இலங்கையில் குவியும் வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் குவியும் வெளிநாட்டவர்கள்! 1.2 மில்லியனைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இதற்கமைய, இந்த ஆண்டு 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,236,695 ஆகப் பதிவாகிப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் அண்டை நாடான இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவிலிருந்து அதிகப்படியாக 314,163 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் இருந்து 117,844 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கு இந்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரிய அளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link