உள்ளூர்

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள்

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து, மோட்டார் வாகனங்களுக்காக டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இது தொடர்பான விசேட அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இதற்கென ‘தேசிய காப்புறுதிச் சரிபார்ப்பு அமைப்பு’ (National Insurance Verification System) உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பொலிஸார் பின்வரும் மூன்று முறைகள் மூலம் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்த முடியும்:

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

1. USSD குறியீடு (*1338#):

எந்தவொரு மொபைல் இணைப்பிலிருந்தும் *1338# என்ற எண்ணை அழைத்து, வாகன இலக்கம் அல்லது காப்புறுதிச் சான்றிதழ் இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் அதன் தற்போதைய நிலையை உடனடியாக அறியலாம்.

2. SMS சேவை (1338):

வாகன இலக்கம் அல்லது காப்புறுதிப் பத்திர இலக்கத்தை டைப் செய்து 1338 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பதில் தகவலைப் பெறலாம்.

3. உடனடி அழைப்பு (1338):

1338 என்ற குறுகிய எண்ணை அழைத்து, உரிய காப்புறுதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர் சேவைப் பிரிவு ஊடாக விபரங்களை உறுதிப்படுத்தலாம்.


வாகன இலக்கத்தை உள்ளிடும் முறை:

தகவல்களைப் பெற வாகன இலக்கத்தை உள்ளிடும்போது இடைவெளி (Space) விடக்கூடாது.

  • உதாரணம்: WP-CAA-1234 (சிறுகோடு பயன்படுத்தப்பட வேண்டும்).
  • வாகன இலக்கத்தில் “ஸ்ரீ” என்று இருந்தால், அதனை ஆங்கிலத்தில் “SRI” என உள்ளிட வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

  • கட்டணம்: 1338 எண்ணுக்கான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.
  • பழைய அட்டைகள்: ஏற்கனவே உங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை தொடர்ந்தும் செல்லுபடியாகும்.
  • சட்ட அங்கீகாரம்: மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் இந்த டிஜிட்டல் அட்டைகள் முழுமையான சட்ட அங்கீகாரம் கொண்டவை. எனவே, பொலிஸார் சோதனையின் போது டிஜிட்டல் பிரதியையோ அல்லது அதன் அச்சிடப்பட்ட நிழற்படப் பிரதியையோ சமர்ப்பிக்க முடியும்.

எதிர்காலத்தில் தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவதை நிறுத்தி, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link