இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜமைக்காவின் சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சி (Toss) மட்டுமே நடத்த முடிந்ததோடு, அதில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீசத் (Bowl First) தீர்மானித்திருந்தது. எனினும், மைதானத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மைதானத்தின் தரைப்பகுதி விளையாட முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டதால், அங்குள்ள நேரப்படி மாலை 06:35 மணியளவில் போட்டியை முற்றிலுமாக கைவிடுவதற்கு நடுவர்கள் தீர்மானித்தனர்.




