கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் பனியின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் நுவரெலியா நகரம், கந்தபளை, நானுஓயா மற்றும் லிந்துலை போன்ற பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகின்றது. இதனால் வீதிகளில் சில அடி தூரத்திற்கு அப்பால் உள்ள காட்சிகளைக்கூடத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வீதிகளில் நிலவும் தெளிவற்ற காலநிலை காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட போக்குவரத்துப் பொலிஸார், சாரதிகளுக்குப் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்:
- வாகனங்களைச் செலுத்தும் போது கட்டாயமாக முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டுச் செல்லவும்.
- முக்கியமாக நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி ஆகிய பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், மிக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்தவும்.
- பனிமூட்டம் காரணமாக வீதியோரங்கள் சரியாகத் தெரியாததால், வேகத்தைக் கட்டுப்படுத்தி ஊர்ந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

