மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அதேவேளை, அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதன் பின்னணியில், மற்றுமொரு பெண்ணின் கொலையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


