க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீள்மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு! இணையத்தளங்களின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர (GCE A/L) பரீட்சை பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டுப் பெறுபேறுகள் இன்று (05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள் தற்போது பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய முகவரிகளின் ஊடாகத் தங்களின் சுட்டெண்ணை உள்ளீடு செய்து, மீள்மதிப்பீட்டுப் பெறுபேறுகளைச் சரிபார்த்துக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
: மீள்பரிசீலனை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்கள் உள்ள பரீட்சார்த்திகள், பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவைத் தொடர்பு கொள்ள முடியும் எனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
- 📞 அவசர நேரடி அழைப்பு இலக்கம்: 1911
- ☎️ ஏனைய தொலைபேசி இலக்கங்கள்: 011 2784208, 011 2784537, 011 2785922
இவ்இலக்கங்களை அழைப்பதன் மூலம் பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான உரிய தகவல்களையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.



