கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய கால அட்டவணை:
பயணிகளின் வசதி கருதி வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மாத்திரம் இந்தச் சேவை தற்காலிகமாக முன்னெடுக்கப்படவுள்ளது:
- கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை: திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் புகையிரதம் பயணிக்கும்.
- காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை: செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாத்திரம் புகையிரத சேவை இடம்பெறும்.
வசதிகள் மற்றும் முன்பதிவு:
இந்த புகையிரதமானது குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளைக் (AC First Class) கொண்டதாகும். நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் சொகுசான பயணத்தை அனுபவிக்க முடியும்.
பயணிகள் புகையிரதத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட புகையிரத நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தமது பயணச்சீட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
- 🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள்
- 👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள்
- 📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)




