நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்:
📸 Instagram: https://www.instagram.com/elankamirror.lk/
🎵 TikTok: https://www.tiktok.com/@elankamirror
👥 Facebook: https://www.facebook.com/elankamirror💬
எமது WhatsApp குழுவில் இணைய: https://chat.whatsapp.com/C3UZ822PmJ4HgigfDqqSFM
வானிலை நிலவரம்: இந்தக் குறைந்த அழுத்தத் தொகுதியானது இலங்கையை விட்டு விலகி நகரத் தொடங்கியுள்ள போதிலும், இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும்.
பலத்த மழை எதிர்பார்க்கப்படும் பகுதிகள்:
- மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள்.
- அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள்.
- குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




