தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 40-க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள் இன்று (15) காலை நிலவரப்படி வான்பாயத் தொடங்கியுள்ளன.
வான்பாயும் முக்கிய நீர்த்தேக்கங்கள்:
- அநுராதபுரம்: ராஜாங்கனை, நாச்சிதூவ, யாண் ஓயா.
- குருநாகல்: தெதுரு ஓயா, மாகல்ல, உஸ்கல சியம்பலன்கமுவ.
- புத்தளம்: தப்போவ, இகிணிமிட்டிய.
- ஹம்பாந்தோட்டை: லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவி, வீரவில.
- இது தவிர கண்டி, மன்னார், மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன.
வான் கதவுகள் திறப்பு: முக்கியமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 கதவுகளும், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத் தெரிவித்துள்ளார்.
கலா ஓயா, கிரிந்தி ஓயா மற்றும் மாணிக்க கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் கரையோரங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




