நான் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான இளைஞர் விவகாரச் செயலாளராகவும், ஊடகச் செயலாளராகவும் கடமையாற்றியவன். நான் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.
எவ்வாறாயினும், அண்மைக்காலத்தில் இந்தப் பிரதேசத்திற்கு மேலிருந்து இறக்கப்பட்ட (parachute) தேர்தல் தொகுதி அமைப்பாளர்களின் நியமனம் காரணமாக நான் சற்று அதிருப்திக்கும், மனக்கவலைக்கும் உள்ளாகியிருந்தேன்.
அதற்கமைய, நான் எடுத்த அவசரத் தீர்மானத்தினால் தான் கடந்த 24 ஆம் திகதி பாணந்துறை நகரில் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் (Pohottuwa) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அவர்களுடன் மேடையில் ஏறினேன்.
எனக்கு இன்னும் கூட என்ன நடந்தது என்று சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. எனவே, நான் எடுத்த அந்த அவசரத் தீர்மானம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் (சஜப) உறுப்பினர்களுக்கோ அல்லது பொதுஜன பெரமுனவின் (Pohottuwa) உறுப்பினர்களுக்கோ ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால், நான் அவர்கள் அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்,” என அவர் மேலும் தெரிவித்தார்.




