யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், திடீரெனக் குறுக்கே சென்ற முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!
விபத்தின் போது, டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியின் மீது ஏறியதில், அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களின் கால்களும் நசுங்கிப் படுகாயமடைந்துள்ளனர்.
Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
படுகாயமடைந்த மூவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அறியமுடிகிறது.



