உள்ளூர்

தென்மேற்கு திசையிலிருந்து வீசும் பலத்த காற்று!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகும் அபாயம்! மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!

நீர்கொழும்பு முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான நாட்டின் கடலோரப் பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேயசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேயசன்துறை வரையான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேயசன்துறை வரையான கடற்பரப்புகளும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மேலும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேயசன்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link