உள்ளூர்

அமெரிக்கா அன்பளித்த 10 ஹெலிகொப்டர்கள்

அமெரிக்க அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பாக வழங்கிய TH-57 (Sea Ranger) ரக 10 ஹெலிகொப்டர்கள் கடல் மார்க்கமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.

இந்த ஹெலிகொப்டர்களின் வருகையானது, இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கியமானதொரு மைல்கல்லாகக் கருதப்படுவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும், இது இலங்கை விமானப்படையின் செயல்பாட்டு மற்றும் பயிற்சி திறன்களை மேம்படுத்துவதற்கான பெறுமதியான பங்களிப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

🛠️ தற்போதைய நிலைவரம்: தற்போது இந்த 10 ஹெலிகொப்டர்களும் இரத்மலானை விமானப்படைத் தளத்தில் வைக்கப்பட்டு, தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் சோதனைப் பறப்புகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பின்னர், இந்த ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கை விமானப்படை சேவையில் இணைக்கப்பட்டு செயல்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link