விளையாட்டு

இலங்கை ‘ஏ’ மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த மன்னார் வீராங்கனை

sport news

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ‘ஏ’ பிரிவில் (Sri Lanka Women’s ‘A’ Team) இடம்பிடித்து, சர்வதேச ரீதியில் தடம் பதித்துள்ள மன்னார் மாவட்டம், பேசாலை கிராமத்தைச் சேர்ந்த வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினியை வரவேற்கும் விசேட நிகழ்வு இன்று (28) காலை மன்னார் அரச பஸ் நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகம் மற்றும் அதன் பழைய மாணவர்கள் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த பாராட்டு மற்றும் வரவேற்பு விழாவினை ஏற்பாடு செய்திருந்தன.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த வீராங்கனை சஜிந்தினி மற்றும் வருகை தந்த விருந்தினர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மங்கள இசை வாத்தியங்கள் முழங்க, அவர்கள் மன்னார் பஜார் பகுதியினூடாக மாவட்டச் செயலகம் வரை உற்சாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

மாவட்டச் செயலகத்தை ஊர்வலம் வந்தடைந்ததும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் வீராங்கனை சதீஸ்குமார் சஜிந்தினியை நேரில் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தனது சொந்தக் கிராமமான பேசாலைக்கு மக்கள் புடைசூழ அழைத்துச் செல்லப்பட்டார்.

மன்னார் பேசாலை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி, பேசாலை புனித பற்றிமா மகா வித்தியாலயத்தின் மிகச்சிறந்த பழைய மாணவியாவார். தனது திறமையால் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்த அவர், சமீபத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ மகளிர் அணிகளுக்கு இடையிலான சர்வதேசப் போட்டியிலும் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

விளையாட்டு

சர்வதேச மேசைப்பந்து போட்டியில் இலங்கைக்கு 14 பதக்கங்கள்: அமைச்சர் வாழ்த்து!

இந்தியாவின் சிம்லாவில் நடைபெற்ற தெற்காசிய இளையோர் மேசைப்பந்து சம்பியன்ஷிப் 2026 போட்டியில் 3 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை வென்று இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது.
விளையாட்டு

இலங்கையில் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் உடனடியாக
Share via
Copy link