இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) தங்களது நாட்டிற்குள் நுழைவதற்கு முற்றாகத் தடை விதித்துள்ளதாக பிரான்ஸ் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noël Barrot) இந்த விசேட தீர்மானத்தை ஊடகங்களுக்குத் உறுதிப்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைகள் மற்றும் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் (West Bank) முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத குடியேற்ற விவகாரங்கள் காரணமாகவே பிரான்ஸ் இந்த இராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் நான்கு முக்கிய குடியேற்றத் தலைவர்கள் (Settler Leaders) மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய 21 தீவிர குடியேறிகளுக்கும் (Settlers) பிரான்ஸுக்குள் நுழைவதற்கு விசா மற்றும் பயணத் தடைகள் விதிக்கப்படுவதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




