தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார ரீதியான பிணைப்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
- இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
- இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் நெருக்கமான உறவுகளையும் வலுவான கூட்டாண்மையையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் குறித்து அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
- இந்திய – இலங்கை கூட்டாண்மைக்குள் இணைந்து செயல்படுவதன் மூலம், மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்!
துல்லியமான, பக்கச்சார்பற்ற மற்றும் உடனடி செய்திகளை உங்களுக்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.
🟢 WhatsApp Channel: இணைந்து கொள்ளுங்கள் 👍 Facebook Page: விருப்பம் (Like) செய்யுங்கள் 📱 TikTok: பின்தொடருங்கள் (Follow)




