உள்ளூர்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார் யோஷித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், முன்னாள் பிரதமரின் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று (17) காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட முறைப்பாடு ஒன்றுக்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகச் செயல்பாடுகள், நிதிப் பயன்பாடு மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாகத் திலங்க சுமதிபாலவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகிய யோஷித ராஜபக்ஷவிடம் தற்சமயம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →
Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link