உள்ளூர்

எரிபொருள் விலை மாற்றத்தால் பஸ் கட்டணங்களை உயர்த்த அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிரடி அதிகரிப்பு! குறைந்தபட்சக் கட்டணம் ரூ.34 ஆக உயர்வு! ஜூலை 5 நள்ளிரவு முதல் அமல்!

நாட்டில் பஸ் கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அமைச்சரவையின் விசேட ஒப்புதலுக்கு அமைய இந்த கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

இந்த புதிய கட்டணத் திருத்தத்தின்படி, இதுவரை காலமும் ரூ. 30 ஆகக் காணப்பட்ட ஆகக் குறைந்த பஸ் கட்டணம், ரூ. 34 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த புதிய பஸ் கட்டணத் திருத்தம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

புதிய கட்டண விபரங்கள்:

  • சாதாரண பஸ் சேவைகள் (Ordinary Services):
    • 100 கிலோமீட்டர் வரையான தூரத்திற்கு — 12% அதிகரிப்பு
    • 100 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு — 20% அதிகரிப்பு
  • சொகுசு பஸ் சேவைகள் (Luxury Services):
    • 100 கிலோமீட்டர் அல்லது அதற்குக் குறைந்த தூரத்திற்கு — 12% அதிகரிப்பு
    • 100 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு — 15% அதிகரிப்பு

உலக சந்தை மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் பஸ் உதிரிப்பாகங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பஸ் கட்டணங்களைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் நிலவி வரும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புதிய மெட்ரோ டிரான்ஸிட் (Metro Transit) பஸ்களின் இயக்கச் செலவுகள் என்பன இந்த கட்டண உயர்வில் முக்கிய காரணிகளாகக் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link