பாடசாலைகளின் இரண்டாம் தவணை நிறைவு! மூன்றாம் தவணை ஆரம்பமாகும் திகதிகளை அறிவித்தது கல்வி அமைச்சு!
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று வெள்ளிக்கிழமை (24)
பாடசாலை மூன்றாம் தவணையின் முதலாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜூலை 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


