பேராதனை மற்றும் கண்டி இடையேயான முல்கம்பொல ரயில் கடவை தற்காலிகமாக மூடல்! மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் வேண்டுகோள்!
மாத்தளை ரயில் பாதையில் பேராதனை மற்றும் கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள முல்கம்பொல (ரேன்டன் ஹில்ஸ் – Randles Hill) ரயில் கடவையை, இரட்டை ரயில் பாதைக்கு இணங்கப் புனரமைக்கும் பணிகள் காரணமாக தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்புனரமைப்புச் செயற்பாடுகளை மிகத் திறம்பட மேற்கொள்வதற்காக, 2026 ஜூலை 10ஆம் திகதி மாலை 06.00 மணி முதல் 2026 ஜூலை 13ஆம் திகதி முற்பகல் 04.00 மணி வரை, கெட்டம்பே – கண்டி மேல் வீதியையும் வில்லியம் கோபல்லவ வீதியையும் இணைக்கும் முல்கம்பொல ரயில் கடவையூடான வாகனப் போக்குவரத்து முழுமையாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குறிப்பிட்ட காலப்பகுதியில் கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய கடுமையான வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்கும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




