ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கடந்த நாட்களாக அதிகரித்து, பல நகரங்களுக்குப் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டங்கள் முதலில் பொருளாதார காரணங்கள் (விலைவாசி உயர்வு, நாணய மதிப்பு சரிவு உள்ளிட்டவை) காரணமாகத் தொடங்கி, பின்னர் அரசுக்கு எதிரான கோஷங்களுடன் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது,
இந்நிலையில், அதிகாரிகள் இணைய சேவைகள் மற்றும் சர்வதேச தொலைபேசி இணைப்புகளை துண்டித்துள்ளதாக Associated Press உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்பில் வெவ்வேறு தகவல்கள் வெளியாகின்றன: Reuters தகவலின்படி குறைந்தது 34 போராட்டக்காரர்கள் மற்றும் 4 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்; மற்ற சில அமைப்புகள்/ஊடகங்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம் என கூறுகின்றன

