நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, கச்சத்தீவு மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்

.
- எமது இதயத்தைக் கவர்ந்த தமிழ்நாட்டின் முதலமைச்சராகவுள்ள விஜய்க்கு, அடக்கப்பட்ட தமிழன் என்ற ரீதியில் தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
- விஜய் கச்சத்தீவைக் கேட்டதற்கு ஜனாதிபதி வழங்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால், கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும்; தமிழக மக்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
- வட மாகாணத்தின் தீவுப் பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் சபையில் முன்வைத்தார்.
“கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள். அவர்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.” – நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா


