உலகச் செய்திகள்

ரஷ்யாவுடன் வர்த்தகம் தொடர்ந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரிகள்: டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரி கொள்கைகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தக உறவுகளை பேணினால், இந்தியா மீது விதிக்கப்படும் அமெரிக்க வரிகள் விரைவில் அதிகரிக்கப்படலாம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், டிரம்பின் வரி நடவடிக்கைகள் காரணமாக, இந்தியா தற்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்த அளவிலேயே எண்ணெய் வாங்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அரசியல் எதிர்வினை

டிரம்ப் மற்றும் கிரஹாமின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்தியாவில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த விவகாரம் இந்தியாவின் கௌரவத்தை அவமதிப்பதாகும் எனக் குறிப்பிட்ட இந்திய தேசிய காங்கிரஸ், பிரதமர் நரேந்திர மோதி இதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

அதேவேளை, ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மோதி, உங்கள் மௌனம் நாட்டின் கௌரவத்தைப் பாதிக்கிறது”
எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த விவகாரம், இந்தியா–அமெரிக்கா–ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: International Media Reports

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகச் செய்திகள்

மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஐநா கோரிக்கை

காசா பகுதியில் தொடரும் மோதல்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு கோரிக்கை
உலகச் செய்திகள்

திமுக மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

போலி மதச்சார்பின்மையை பேசிக்கொண்டு, தொடர்ந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்து வருவது திமுக என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அதிகாரத்தை தவறாக