நாட்டின் வீடமைப்புத் துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் சிக்கல்களுக்குத் தீர்வாக, புதிய தேசிய வீட்டுவசதிக் கொள்கை (National Housing Policy) தயாரிக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


