நாட்டின் சில மாவட்டங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு
- வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
- வடமேல் மாகாணத்தில் ஓரிரு தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
- நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
- மேற்கு, சபரகமுவா, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் மூடுபனி நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

