உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் இன்று (05) காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில், வேளாண்மை அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் ஒரு கட்டிடத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்நேரத்தில் அமைச்சரவையின் உறுப்பினராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் விளக்கம் பெறுவதற்காகவே அவரை இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அவர் இன்று காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி, சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து
உள்ளூர் செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் MoU களுக்கு அமைச்சரவை அனுமதி

கல்விக்கான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் ஐந்து ஆண்டுக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை