முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் இன்று (05) காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், வேளாண்மை அமைச்சின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் ஒரு கட்டிடத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்நேரத்தில் அமைச்சரவையின் உறுப்பினராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் விளக்கம் பெறுவதற்காகவே அவரை இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அவர் இன்று காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி, சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

