உள்ளூர் செய்திகள்

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!

மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான ‘ஹயஸ்’ (Hiace) ரக வாகனம் ஒன்றை நிறுத்த முற்பட்டுள்ளனர். எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி குறித்த வாகனம் அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்றுள்ளது.

இதன்போது, அந்த வாகனம் பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் நிலையில், தற்காப்பு மற்றும் வாகனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொலிஸாரால் மீட்கப்பட்டு அதிகாலை 1:18 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கைது மற்றும் விசாரணை:

சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மேலும் இருவர் பயணித்துள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து