உள்ளூர்

ஹெரோயினை வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

3.074 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு! கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 35 வயது நபருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு!

3.074 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Elanka Mirror - Facebook
எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்!

கெக்கிராவ, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கடுமையான தண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாகியுள்ளார். சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்
உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
இணையுங்கள் →

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கின் இருதரப்பு வாதங்களையும், சாட்சியங்களையும் தீர்க்கமாக ஆராய்ந்த அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்ற நீதவான், சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதற்கமைய, சட்டவிரோதமாகப் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றங்களுக்காகக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி உத்தர பிறப்பித்துள்ளது.

Follow Us
Elanka Mirror
சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது சமூக வலைதளப் பக்கங்களுடன் இணைந்திருங்கள்

elm_admin92

About Author

You may also like

மண்சரிவு அபாய எச்சரிக்கை!
உள்ளூர்

பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
உள்ளூர்

குருநாகல் மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் விளக்கமறியலில்!

Elanka Mirror - Facebook எங்கள் பக்கத்தை Like செய்து தொடர்ந்து படியுங்கள்! 👍 Like பண்ணுங்கள் ➕ Follow பண்ணுங்கள் 30 இலட்சம் ரூபாய் இலஞ்சப்
Share via
Copy link