உள்ளூர் செய்திகள்

முடிவுக்கு வந்தது இழுபறி; அரசியலமைப்பு சபையின் புதிய உறுப்பினர்கள் குறித்து பிரதமர் மற்றும் சஜித் அதிரடி முடிவு!

இலங்கை அரசியலமைப்பு சபையின் (Constitutional Council) காலியாக இருந்த மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கான இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள புதிய சிவில் பிரதிநிதிகள் வருமாறு:

  1. பேராசிரியர் வசந்தா செனவிரத்ன: கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் மனித உரிமைகள் ஆய்வு மையத்தின் பணிப்பாளர்.
  2. திரு. ஒஸ்டின் பெர்னாண்டோ: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட பல உயரிய பதவிகளை வகித்தவர்.
  3. திரு. ரஞ்சித் ஆரியரத்ன: அரச சேவையின் விசேட தர ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரி.

அரசியலமைப்பு சபையில் ஏற்கனவே சிவில் சமூகப் பிரதிநிதிகளாக இருந்த கலாநிதி அனுலா விஜேசுந்தர, கலாநிதி பிரதாப் ராமானுஜம் மற்றும் பேராசிரியர் தினேஷா சமரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 16 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்த தீவிர கலந்துரையாடல்களின் பலனாக இந்தப் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் படி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையின் பேரில் சபாநாயகரால் முன்மொழியப்படும் இந்த பெயர்களை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார். அதன் பின்னர் ஜனாதிபதி இதற்கான உத்தியோகபூர்வ நியமனங்களை வழங்குவார்.

10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையில், சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமானது. உயரிய அரச பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதில் இவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

news@elankamirror.lk

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள்

குஷ் போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

சுமார் ரூ. 500 மில்லியன் பெறுமதியான குஷ் (Kush) போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மூன்று இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து