இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்! போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு! உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். துருக்கியின் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த அதிரடி விபரங்களை வெளியிட்டார்.
இருநாடுகளுக்கும் இடையில் அண்மையில் எட்டப்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை (MoU) தற்போது முற்றாக முடிவுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய தினம் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் ஈரான் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த ஜனாதிபதி ட்ரம்ப், “நான் இனி அவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை, அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல், அவர்கள் பொய்யர்கள்” என்று மிகவும் கடுமையான தொனியில் தெரிவித்தார்.
ஈரான் அண்மையில் சர்வதேச கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கடுமையான போர் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை சடுதியாக 5 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




