மகாவலி கங்கையின் நீர்மட்டம் சரிவு
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாகக் குறைவடைந்துள்ளது. இதன் விளைவாகக் கண்டி – திகன பிரதேசத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இலங்கை இராணுவம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் கண்டி மாவட்டச் செயலாளர் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திகன பிரதேசத்திற்கு நீர் விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்காக, மகாவலி கங்கையின் நீரைத் […]

