விவசாயிகளுக்கு தடையின்றி உரம் கிடைக்க புதிய ஏற்பாடு
யல பருவ நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு உரங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக, விவசாய சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க இது குறித்து விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. யல பருவ நெற்செய்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் ஏனைய பொது விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும். […]


