நவகமுவ பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால், அந்தக் கட்டிடத்தின் உட்புறம் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: நவகமுவ பொலிஸார்


