நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை நிலவரம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (G.C.E. A/L) எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சைகள் ஜனவரி 20ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பரீட்சார்த்திகள் உரிய நேரத்தில் பரீட்சை மையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

