ஒரே நாளில் சிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர்? ஷிரந்தி மற்றும் நாமலுக்கு பிப்ரவரி 3 இல் விசாரணைக்கு வர உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெவ்வேறு விசாரணைப் பிரிவுகளில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு: பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 27 ஆம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றைய தினம் தம்மால் […]










