இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி-20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஆனால், ஒரு முக்கிய திருப்பமாக, பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சூழல் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

