மன்னார், இலுப்பக்கடவை (Irukkalampiddi) பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் 70 மில்லிமீட்டருக்கும் குறைவான சுற்றளவு கொண்ட 1,158 சங்குகளை வைத்திருந்த நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS கஜபா பிரிவினர் மற்றும் மன்னார் மீன்பிடி பரிசோதகர்கள் இணைந்து கடந்த 25 ஆம் திகதி இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இலுப்பக்கடவை பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றைச் சோதனையிட்ட போதே இந்தச் சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இலங்கைச் சட்டத்தின்படி, 70 மில்லிமீட்டருக்கும் குறைவான சுற்றளவு கொண்ட சங்குகளைச் சேகரிப்பதோ அல்லது வைத்திருப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட சங்குகள் அனைத்தும் இந்த சட்ட அளவை விடக் குறைவாக இருந்தமையால் அவை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர் இலுப்பக்கடவை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபரையும், பறிமுதல் செய்யப்பட்ட சங்குகளையும் மன்னார் மீன்பிடி பரிசோதகரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
எமது செய்திகளை உடனுக்குடன் பெற: ✅ WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBR8cH2ER6gu3TSFq01

